உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கஞ்சன் விகா காலனி பகுதியை சேர்ந்தவர் போலா சோனி. சம்பவத்தன்று இரவு 9 மணி அளவில் தெரிந்த ஒருவரது பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வேண்டும் என்று குடும்பத்தினர் அனைவரையும் தயாராக சொல்லியுள்ளார். அதேபோன்று குடும்ப உறுப்பினர்கள் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க தயாராகி விட்டு போலா சோனியை தேடி உள்ளனர். ஆனால் அவர் காணாமல் போய் உள்ளார்.

இதனை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று அவரது மகன் சச்சின் முடிவு செய்த போது வீட்டிற்கு வெளியே போலா சோனியின் சடலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட விரைந்து வந்தவர்கள் சடலத்தை ஆராய்ந்ததில் கற்களால் தாக்கியும் கத்தியால் குத்தியும் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி ஆகி உள்ளது. இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை குற்றவாளியை தேடி வருகின்றனர்.