உத்திரபிரதேசம் மாநில அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் 60000 போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேடு நடந்ததாக எடுத்த புகாரின் பேரில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறு செய்யும் நபர்கள் அல்லது அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தி உள்ளது. அடுத்த ஆறு மாதங்களில் முழு வெளிப்படை தன்மையுடன் ஆள்சேர்ப்பு தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.