கடலூர் மாவட்டத்தில் உள்ள எம்.பரூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் கோவிந்தசாமி, சுரேஷ், செல்வராசு, இலியாஸ், ராமலிங்கம், தனசேகர் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சுரேஷ் உட்பட 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த சீட்டு கட்டுகள், பணம் ஆகிவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.