கடலூர் மாவட்டத்தில் உள்ள வல்லம்படுகை பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ராஜா வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு வெளியே நின்ற தெரு நாய் ராஜாவை கடித்தது. இதற்காக ராஜா நாட்டு மருந்து சாப்பிட்டு வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட ராஜாவை புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.