கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தெலுங்குபாளையம் ராஜராஜேஸ்வரி நகரில் காயத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் துடியலூரில் டீக்கடை நடத்தி வரும் பிரசன்னா, அவரது மனைவி நிரஞ்சனா ஆகியோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணிபுரியும் எங்களுக்கு தெரிந்த ஒருவர் மூலம் பணம் கொடுத்து அரசு வேலை வாங்கிவிடலாம் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.

இதனை நம்பி காயத்ரி உள்பட 10 பேர் நிரஞ்சனாவிடம் 23 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயை கொடுத்தனர். ஆனால் கூறியபடி அவர்கள் வேலை வாங்கி கொடுக்காமல் பணத்தை மோசடி செய்துவிட்டனர். இதுகுறித்து காயத்ரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நிரஞ்சனாவை கைது செய்தனர். தலைமறைவான பிரசன்னாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.