தமிழகத்தில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் வழி மதிப்பீடு தேர்வு தொடர்பான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தங்களது கற்றல் திறனை அறிந்து கொள்வதற்கு மாதம் ஒருமுறை திறன் வழி மதிப்பீட்டு தேர்வுகளை நடத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் இந்த தேர்வுகளுக்கான வழிகாட்டுதல்களை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் https://exam.tnschools.gov.in என்ற இணையதளத்தில் தேர்வுக்கு முந்தைய நாள் அனைத்து பள்ளிகளில் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.