அமெரிக்காவில் உள்ள இண்டியனா என்ற பகுதியில் ஆறு மாத குழந்தையை எலிகள் கடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தையின் உடலில் 50க்கும் மேற்பட்ட எலி கிடைத்த காயங்கள் இருந்துள்ளது. கடந்த மாதம் டேவிட் மற்றும் ஏஞ்சல் தம்பதியின் ஆறு மாத குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த போது எலிகள் குழந்தையை கடித்து குதறியுள்ளன.

அதில் குழந்தை படுகாயம் அடைந்து துடிதுடித்து உயிரிழந்தது. இது தொடர்பாக தகவல் கிடைத்தது போலீசார் வீடு முழுவதும் அசுத்தமாக இருப்பதை கண்டறிந்தனர். அலட்சியமாக இருந்த பெற்றோரும் குழந்தையின் அத்தையும் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.