பொது இடத்தில்  நபர் ஒருவர் இருமியததற்காக  சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த சம்பவம் சிங்கப்பூரில் நடந்துள்ளது. சிங்கப்பூரில், கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ்செல்வம் என்ற 64 வயது நபருக்கு இரண்டு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் அக்டோபர் 18, 2021 அன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அப்போது இருமலுடன் சுற்றித் திரிந்தார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வினோதமான தண்டனை மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.