புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதுக்கோட்டை போஸ் நகரில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன், ராஜேந்திரன், லட்சுமணன், செந்தில், சேகர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ரவிச்சந்திரன் உட்பட ஐந்து பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 4500 பணத்தை பறிமுதல் செய்தனர்.