பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களம் கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதிமூலம் (38) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறாள். இந்நிலையில் ஆதிமூலத்திற்கு திருமணம் செய்ய பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். ஆனால் அவருக்கு ஏற்ற வரன் அமையவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த ஆதிமூலம் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆதிமூலத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.