தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்த நிலையில் கேரளா உள்ளிட்ட ஐந்து தென் மாநிலங்களிலும் பாஜகவை எதிர்த்து பானை சின்னத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இந்திய அளவில் பாஜகவை எதிர்க்கும்  தலித் தலைவராக திருமாவளவனை முன்னிறுத்தும் நடவடிக்கையாக இந்த அறிவிப்பை கருதலாம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.