மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என பிரதமர் மோடி தொடர்ந்து கூறி வருகிறார். இந்த நிலையில், பா.ஜ.க. 200 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

“பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவாதங்களுக்கு இரையாகாதீர்கள். அவை அனைத்தும் தேர்தல் நேரத்தில் கூறப்படும் வெற்று வாக்குறுதிகள்” என்றும் கடுமையாக விமர்சித்தார்.