ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது தெலுங்கு தேசம் கட்சியினர் என்று ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து கூறிய அக்கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான அம்பாதி ராம்பாபு, ஜெகன் மீதான தாக்குதலின் பின்னணியில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு இருப்பதாக குற்றம்சாட்டினார்.