தாம்பரம்-நாகர்கோவில் ரயில் மார்ச் 16-21 ஆம் தேதி வரை நெல்லையுடன் நிறுத்தப்படும். நாகர்கோவில்-தாம்பரம் ரயில் மார்ச் 17-22 ஆம் தேதி வரை நெல்லையில் மாலை 5:05-க்கு புறப்படும். இதையடுத்து திருச்சி-திருவனந்தபுரம் ரயில் மார்ச் 17- 22 ஆம் தேதி வரை நெல்லையுடன் நிறுத்தப்படும். அதேபோல் திருவனந்தபுரம்-திருச்சி ரயில் மார்ச் 17-22 ஆம் தேதி வரை நெல்லையில் இருந்து பிற்பகல் 2:30-க்கு புறப்படும். இதுகுறித்த முழு விவரங்களை www.sr.indianrailways.gov.in என்ற இணையப்பக்கத்தில் தெரிந்து கொள்ளவும்.