இளைய தலைமுறையினர் தேவைக்கு மட்டுமே தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டுமே தவிர்த்து, தொழில்நுட்ப அடிமைகளாக மாறிவிடக்கூடாது என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். சென்னை கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “வதந்திகள் பரப்புதல், ஆபாச வலைத்தளங்கள், ஆன்லைன் ரம்மி என பல கேடுகள் இருக்கிறது.

ஆகவே வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தை இளைய தலைமுறையினர் சரியாக பயன்படுத்தி முன்னேற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். அதனை தொடர்ந்து சென்னையில் வெள்ளத்தை தடுக்க பரிந்துரைகள் அளித்த திருப்புகழ் குழுவை முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார்.