ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பழனிகவுண்டன் பாளையம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதிமணி என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த ஜோதிமணியிடம் குடிபோதையில் மாதேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் கோபத்தில் நீ செத்து தொலை என்றும், செத்தால் தான் இரண்டாவது திருமணம் செய்ய முடியும் எனவும் கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் ஜோதிமணி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மாதேஷை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த மகளிர் நீதிமன்றம் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக மாதேஷுக்கு 3 ஆண்டுகள் ஜெயல் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபாரமும் விதித்து உத்தரவிட்டது.