கரூர் மாவட்டத்தில் உள்ள செக்கனம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பிரகாஷ், ராஜலிங்கம் ஆகியோருடன் கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சுப்பிரமணி என்பவர் ஓட்டி வந்த கார் பேசிக் கொண்டிருந்த பழனிசாமி உள்பட 3 பேர் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பழனிச்சாமி, பிரகாஷ், ராஜலிங்கம் ஆகிய 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.