தேனி மாவட்டத்திலுள்ள வயல்பட்டி மந்தையம்மன் கோவில் ஓடை தெருவில் ரம்யா என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ரம்யா தனது தாய் தனலட்சுமி, அக்காள் காயத்ரி ஆகியோருடன் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராமர் அவரது மனைவி சந்தியா, அவரது தாய் நாகம்மாள் மூன்று பேரும் முன்விரோதம் காரணமாக தனலட்சுமி, ரம்யா, காயத்ரி ஆகிய மூன்று பேரையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும் ராமர் அரிவாளால் தனலட்சுமியை வெட்டினார்.

இதனை தடுக்க முயன்ற ரம்யா, காயத்ரி ஆகியோரை கைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து அவர்கள் தப்பி சென்றனர். இதுநாள் படுகாயம் அடைந்த ரம்யா உள்பட 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராமர் உள்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.