வண்டலூர் உயிரியல் பூங்காவில் ‘ஷேரு’ என்ற மூன்று வயது ஆண் சிங்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார். 

வண்டலூர் உயிரியல் பூங்காவில், ஷேரு என்ற 3 வயது ஆண் சிங்கத்தை, நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்தார். சிங்கத்தை 6 மாதங்களுக்கு பராமரிக்க, சிவகார்த்திகேயன் சுமார் ரூ.75,000 செலுத்தியுள்ளார். கொரோனா காலத்தில், வண்டலூர் பூங்காவில், விலங்குகள் பராமரிக்க முடியாமல் உயிரிழந்தன. இதையடுத்து விலங்குகளை தத்தெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, பலரும் விலங்குகளை தத்தெடுத்து வருகின்றனர்.

. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் பல்வேறு நலப்பணிகளையும், நலிந்த சினிமா கலைஞர்களுக்கு உதவிகளையும் செய்து வருகிறார். அந்த வகையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கத்தை தத்தெடுத்துள்ளார். சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜூலை 14ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.