ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்ற நிலையில்  அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொன்டு வ்ருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாதக கட்சி தன்னிச்சையாக போட்டியிடுகிறது.

இந்நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து பிப்.,13, 14, 15ஆகிய நாட்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மூன்று நாட்களில் கட்சி சார்பில் நடைபெறும் மூன்று பொதுக்கூட்டங்களிலும் அவர் உரையாற்றுவார் என கூறப்பட்டுள்ளது.