காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் புதுக்கோட்டையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200 காங்கிரஸ் கட்சியினரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

இதேபோன்று சென்னையில் உள்ள குரோம்பேட்டையில் புறநகர் ரயில மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 60 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.