வாடிக்கையாளர்களுக்கு இன்று முதல் சிறப்பு சலுகையை அறிவிப்பதாக முன்னணி டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது. ஐபிஎல் நேரத்தில் புதிய டேட்டா திட்டத்தை கொண்டு வந்துள்ளது. “அன்லிமிடெட் டேட்டா” எனப்படும் ப்ரீபெய்டு பயனர்களுக்கு ரூ.49 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜியோ கொண்டு வந்த புதிய டேட்டா திட்டம் ஒரு நாள் வேலிடிட்டியுடன் 25ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஆக்டிவ் பேஸ் பிளான் இருந்தால் மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும் என தெரியவந்துள்ளது. அதிகபட்ச டேட்டாவிற்கு ஜியோ ஏற்கனவே இரண்டு டேட்டா பேக்குகளை வழங்குகிறது.