தெலுங்கானா மாநிலம் ஜாகித்யாலயா மாவட்டம் கோருட்ல அரசு மருத்துவமனையில் வினோதமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள ஏற்காட்டை சேர்ந்த ரவாலி என்ற பெண்ணுக்கு திங்கட்கிழமை அதிகாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு மொத்தமாக 24 விரல்கள் இருந்துள்ளன. குழந்தைக்கு இரண்டு கால்கள் மற்றும் இரண்டு கைகளிலும் ஆறு விரல்கள் என மொத்தம் 24 விரல்கள் இருந்ததை மருத்துவர்கள் கவனித்தனர். இந்த அதிசய குழந்தையை அங்கிருந்த மக்கள் அனைவரும் வியப்புடன் பார்க்கச் சென்றனர்.