விக்ரம் எஸ் புத்தநேசண் என்ற நபர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தாய் குறித்து பகிர்ந்து உள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில் அவரது தாய் சமீபத்தில் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளார். பின்னர் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இது என் அம்மாவின் தட்டு, 20 வருடங்களுக்கு மேலாக இந்த தட்டில் தான் அவர் சாப்பிட்டு வந்துள்ளார்.

1999 ஆம் ஆண்டு நான் ஏழாவது படித்த போது பரிசாக வென்ற தட்டில் தான் 24 வருடமாக அவர் உணவருந்தி வந்துள்ளார் எனவும் இதை எனது தாய் என்னிடம் கூட கூறவில்லை என்றும் உருக்கமாக தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அந்த தட்டின் புகைப்படத்தை பகிர்ந்து மிஸ் யூ அம்மா என்று அவர் உருக்கத்துடன் பதிவிட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் பலரையும் கலங்க வைத்தது மட்டுமல்லாமல் இணையத்தில் பெரிதும் வைரலாகி வருகின்றது.