இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், கடந்த 23 ஆண்டுகளாகப் பிசிசிஐ-யின் முன்னணி வர்ணனையாளராகவும் இருந்த லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் (LS), தற்போது வர்ணனையாளர் பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், இத்தனை ஆண்டுகால அனுபவம் இருந்தும் டாஸ் (Toss) மற்றும் பிரசன்டேஷன் (Presentation) போன்ற முக்கியப் பணிகளுக்குத் தன்னை பிசிசிஐ பயன்படுத்தவில்லை என்றும், புதுமுகங்களுக்கு முன்னுரிமை அளித்துத் தன்னை ஓரங்கட்டியதாகவும் ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளார்.
I am retiring from commentary for BCCI
— Laxman Sivaramakrishnan (@LaxmanSivarama1) March 20, 2026
மேலும், ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “நிறவெறி (Colour Discrimination)” காரணமாகவே தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகப் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இவரது இந்த அதிரடி முடிவுக்கு இந்திய நட்சத்திர வீரர் ஆர். அஸ்வின், “ஓ.. வேண்டாமே! ஏன் இந்த ஐபிஎல்-லில் (IPL 2026) இருந்தும் நீங்கள் ஓய்வு பெறக்கூடாது?” என்று நக்கலாகப் பதிலளித்துள்ளார்.
Oh no! Why not this IPL? https://t.co/ZufOluzyoG
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) March 20, 2026
ஏற்கனவே அஸ்வினின் பந்துவீச்சு முறை குறித்து லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் விமர்சித்திருந்த நிலையில், அஸ்வினின் இந்த ‘பதிலடி’ கமெண்ட் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
