அமெரிக்காவில் கடந்த 25ஆம் தேதி ராபர்ட் கார்டு என்பவர் மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். ஹோட்டல், விளையாட்டு விடுதி உள்ளிட்ட பொது இடங்களில் புகுந்து இவர் மேற்கொண்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 50-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த நபர் யார் என்று விசாரித்த போது முன்னாள் ராணுவ வீரர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவரை வலைவீசி தேடி வந்த காவல்துறையினர் பொதுமக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில் இரண்டு நாள் தேடுதல் வேட்டையில் ராபர்ட் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தனக்குத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.