தற்போது நடக்கும் நிகழ்வுகளை மையமாக கொண்டு இன்ஸ்டாவில் MEME கிரியேட்டர் பதிவிட்ட பதிவு வைரலாகி வருகிறது.

சிறுவயதிலிருந்து நாம் பிரம்மித்து பார்த்த, ஆர்ப்பரித்துக் கொண்டாடிய பல பிரபலங்கள் 2025 இல் என்னவெல்லாம் செய்யப் போகிறார்கள், அது அவர்களுடைய ரசிகர்களிடையே எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து ஒற்றை மீம் புகைப்படத்தில் பதிவிட்டு  கண்கலங்க வைத்துள்ளார் மீம்  கிரியேட்டர் ஒருவர்,

அதன்படி, அனைவருக்கும் பிடித்தமான தல என்று செல்லமாக அழைக்கக்கூடிய எம்.எஸ் தோனி அவர்கள் 2025 இல் சிஎஸ்கே அணியில் இருந்து ஓய்வு பெற்றிருப்பார்,  விராட் கோலி ஐபிஎல் உள்ளிட்ட லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாடி மற்ற வகை போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருப்பார், ரோகித் சர்மா அனைத்து விதமான இன்டர்நேஷனல் கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும்  ஓய்வு பெற்றிருப்பார், நடிகர் விஜய் அரசியலுக்கு வர  இருப்பதால், தளபதி 68 படத்திற்கு பிறகு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு விஜய் படங்களை தியேட்டர்களில்  பார்க்க முடியாத சூழ்நிலை,  நடிகர் அஜித் தனது இருசக்கர வாகனத்தில் உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டு சினிமாவில் அதிக  கவனம் செலுத்தாமல் நண்பர் விஜய் போல  ஓய்வை மேற்கொள்வார் என,

தற்போது நடக்கும் சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு கற்பனை பதிவு ஒன்றை MEME ஆக தயார் செய்து இன்ஸடாவில்  பதிவிட்டுள்ளார். ஒருவேளை 2025 இல் இச்சம்வங்கள் அனைத்தும் நடக்கும் பட்சத்தில், கிரிக்கெட்டிலும், சினிமாவிலும் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டு, மக்களுக்கு அதன் மீதான மோகம் குறைய வாய்ப்புள்ளதாக அவரது  மீம்ஸ் மொழியில், “WE ARE IN END GAME NOW” என பதிவிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Tamil memes|1M ❤️ (@tamilmemes)