மாவீரன் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது ரசிகர்களிடையே கவன ஈர்ப்பை பெற்றுள்ளது.

2022 – 2023 காலகட்டங்களில் வெளியாகி  எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாதது, எதிர்பார்த்ததை விட அதிக அளவில் வெற்றி பெற்றது, வசூல் ரீதியாக வெற்றி,ஆனால் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தது, வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியடைந்தது,என ஏற்ற இறக்கங்களுடன் தமிழ் சினிமா காணப்பட்டது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள மாவீரன் திரைப்படம் ஆடியோ வெளியீட்டில்  தனது முந்தையப் படம் தோல்வி குறித்து மேடையில் சிவா கார்த்திகேயன் பகிர்ந்துள்ளார். அதில்,

 மாவீரன் படம் குறித்தும், அதில் நடித்துள்ள நடிகர்கள், இயக்குனர், தொழிநுட்ப கலைஞர்கள்  ஆகியோர்கள் குறித்தும் பேசிய பிறகு, “போன படம் மிஸ் ஆயிடுச்சு மன்னிச்சுக்கோங்க, ஆனா இந்த தடவை மிஸ்ஸே ஆவாது” என தெரிவித்துள்ளார். வெற்றியை மட்டுமே மேடைகளில் பதிவு செய்யும் பல நடிகர்களுக்கு மத்தியில், தனது தோல்வியை ஒப்புக்கொண்டு அதற்கு ரசிகர்களிடையே மன்னிப்பும் கோரிய சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.