2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் என்பது பிரதமர் மோடியின் களம், பிரதமரின் ஊழல் இல்லாத அரசுக்காக வலிமையான அரசுக்காக மக்கள் அவருக்கு ஓட்டு போட தயாராகி விட்டனர் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, 200வது தொகுதியாக பிப்ரவரி 11ஆம் தேதி சென்னைக்கு வருகின்றோம்.

234 வது தொகுதியாக பல்லடத்தில் நிறைவு விழா நடைபெறுகிறது. பிப்ரவரி 25ஆம் தேதி பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டத்திற்கு வருகிறார். நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைவரும் தயாராகி வருகிறார்கள். 530 ஏக்கர் பரப்பளவில் ஒரு பெரிய மைதானத்தில் என் மண் என் மக்கள் யாத்திரை நடைபெற உள்ளது. 5 லட்சம் இருக்கைகள் மற்றும் 10 லட்சம் பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் அனைவரும் பங்கேற்க உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.