ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவருமே தற்போது கமலாலயத்தில் (பாஜக அலுவலகம்) போட்டி போட்டுக் கொண்டு காத்திருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டலடித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது “எந்த காலத்திலும் எங்கள் கார் கமலாலயம் போகாது என்று ஓபிஎஸ் கூறியிருந்தார்.

ஆனால் அவர் நேற்று இரண்டு மணி நேரம் அங்கு தான் ஒருவரை பார்க்க காத்திருந்தார். அவர்மட்டுமின்றி இன்னொருவரும் அப்படித்தான். இதற்கு மேல் நான் எதுவும் பேச விரும்பவில்லை” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்