தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகையாக மாதம் 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதை தகுதி உள்ள பயனாளிகள் மட்டும் பெறும் வகையில் தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்தது. அதில் அனைத்து பயனாளிகளும் தங்களுடைய பெயருடன் ஆதார் எண், விலாசம், குறைபாட்டின் தன்மை மற்றும் சதவீதம், தேசிய அடையாள அட்டை எண், வங்கி கணக்கு எண், மொபைல் எண் ஆகியவற்றை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தெரியப்படுத்த வேண்டும் எனவும் இதை செய்தால் மட்டுமே 2000 ரூபாய் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.