கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் ஜனபர் தெருவில் சுபேர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சுலைமான்(17) அரசு மேல்நிலை பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சுலைமானும் அவரது நண்பர் உஸ்மான்(18) என்பவரும் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.  இந்நிலையில் ஓசூர் சீதாராம் பழைய பேருந்து நிலையம் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.