பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலம்பாடி கிராமத்தில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கரிகாலன் என்ற மகன் இருந்துள்ளார். விவசாயியான கரிகாலன் இருசக்கர வாகனத்தில் பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சேலம் மாவட்டத்தை சேர்ந்த சோலைராஜா என்பவர் சொந்த ஊர் செல்வதற்காக கரிகாலனிடம் லிப்ட் கேட்டு அமர்ந்து கொண்டார். அவர்கள் பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது மேலபுலியூர் நோக்கி அதி வேகமாக சென்ற மினி பஸ் எதிர்பாராவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கரிகாலனும், சோலைராஜாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.