சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் சுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ கடை நடத்தி வருகிறார். இவருக்கு தேனாம்பேட்டை சேர்ந்த ஹேமாவதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது. இந்நிலையில் ஹேமாவதி சுந்தரியிடம் கடன் கொடுத்தால் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார்.

இதனை நம்பி சுந்தரி 6 லட்ச ரூபாய் பணத்தை ஹேமாவதியிடம் கொடுத்தார். ஆனால் கூறியபடி ஹேமாவதி பணமோ, வட்டி தொகையையோ தரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுந்தரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஹேமாவதி அவருக்கு உடந்தையாக இருந்த ஐயப்பன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் தாமு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.