தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாச்சாத்தியில் சிவலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நடுப்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தார். கடந்த 18-ஆம் தேதி வழக்கம் போல வேலைக்கு சென்ற சிவலிங்கம் விஷம் தின்று விட்டதாக தனது உதவியாளரிடம் தெரிவித்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிவலிங்கத்தை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றிநேற்று சிவலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடந்த 10 மாதங்களாக சிவலிங்கத்திற்கு சம்பளம் வழங்கவில்லை. மேலும் அடிக்கடி பணியிட மாற்றம் செய்வதாகவும், வீடு கட்ட வங்கியில் கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாமல் இருந்து வந்ததால் மன உளைச்சலில் சிவலிங்கம் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.