திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அழகர்நாயக்கன் பட்டியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு போதும்பொண்ணு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் போதும் பொண்ணுக்கும் அதே பகுதியில் வசிக்கும் பெரியசாமி(24), மணிகண்டன்(33) ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது.

நேற்று முன்தினம் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது பெரியசாமியும், மணிகண்டனும் இணைந்து போதும்பொண்ணை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பெரியசாமி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.