திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் ஆத்தூர் காமராஜர் அணைக்கு செல்கிறது. நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு சென்று குளித்தனர். ஆனால் ஏற்கனவே அந்த நீர்வீழ்ச்சிக்கு செல்ல போலீசார் தடை விதித்தனர். தடையை மீறி சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் நீர்வீழ்ச்சியில் குளித்து சென்றனர்.