திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அப்பத்தாங்கல் பகுதியில் ஆயிஷா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு ஆயிஷாவுக்கும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நாசர் ஷெரிப் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர் . தற்போது கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் ஆயிஷா ஜெர்மனியில் இருந்தார். நாசர் பெங்களூரில் இருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாசர் ஆயிஷாவுக்கு இஸ்லாமிய முறைப்படி விவாகரத்து செய்து கொள்ள முத்தலாக் தெரிவித்து தபால் அனுப்பி இருக்கிறார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆயிஷா சொந்த ஊருக்கு வந்து ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் நாசர் விவாகரத்து வராமல் இரண்டாவது திருமணம் அதற்கு ஏற்பாடு செய்தது தெரியவந்தது. இதனால் நாசர் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை இஸ்மாயின் ஷெரீப் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.