தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பையர் நத்தம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். நேற்று முன்தினம் செந்தில்குமார் கடைவீதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது கூலி வேலை பார்க்கும் கண்ணன் என்பவர் குடிபோதையில் செந்தில்குமாரிடம் தகராறு செய்து பாட்டிலால் அவரது தலையில் தாக்கியுள்ளார்.

இதனால் காயாமடைந்த செந்தில் குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதற்கிடையே செந்தில்குமார் கண்ணனின் வீட்டிற்குள் புகுந்து டிவி பீரோ உள்ளிட்டவற்றை உடைத்ததாக தெரிகிறது. இது குறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் கண்ணன் செந்தில்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.