தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜோதிஅள்ளி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் நவீன் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் ஜெயஸ்ரீ என்ற பெண்ணும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் ஜெயஸ்ரீ தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். பலமுறை நவீன் குமார் தனது மனைவி குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அதற்கு ஜெய ஸ்ரீ மறுப்பு தெரிவித்தார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த நவீன் குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நவீன் குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.