விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் சத்யா நகரில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ரயில்வே கேட் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது திருவள்ளுவர் காலணியைச் சேர்ந்த உதயகுமார், ஆனந்தராஜா ஆகிய இருவரும் கத்தியை காட்டி மிரட்டி அந்தோணி ராஜிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றனர்.

அதே சமயம் அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததால் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து அந்தோணி ராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் உதயகுமார், ஆனந்தராஜா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.