திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளியில் ஜெய்லானி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முகமது ரிஸ்வான்(21) காங்கேயத்தில் உள்ள ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர் முகமது சுபீர்(22) என்பவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் முகமது சுபீரும், முகமது ரிஸ்வானும் வாய்க்காலுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் இருவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் கருக்கம்பாளையம் கீழ் பவானி வாய்க்கால் பாலத்தின் அருகே தண்ணீரில் கிடந்த 2 பேரில் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.