கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் பொன்னுசாமி(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரேணுகா தேவி(40) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹர்ஷிப்(3) என்ற குழந்தை இருக்கிறது. இந்நிலையில் பொன்னுசாமி தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் கரூர் ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மலையம்பாளையம் பிரிவு அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி தடுப்பு சுவர் மீது ஏறி சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு சென்றது.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி மோதியதால் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் காயமடைந்த பொன்னுசாமி, ரேணுகாதேவி, ஹர்ஷிவ் ஆகிய 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பொன்னுசாமியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். அவரது மனைவி மற்றும் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.