கோவை சின்னவேடம்பட்டியில் குதிரை மேல் நின்றவாறு சிலம்பம் சுற்றி 5 வயது சிறுவன் சாதனை படைத்திருக்கிறார். தமிழ்வாணன்-உமாமகேஷ்வரி தம்பதியினரின் மகன் ரோகன்குமார். LKG படித்து வரும் ரோகன்குமார் முறையாக சிலம்பம் படித்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு குதிரை மேல் நின்றவாறு சிலம்பம் சுற்றி அசத்தினார்.

இந்த நிலையில் சாதனை முயற்சியாக குதிரை மேல் ஏறி நின்று தொடர்ந்து 2 மணிநேரம் இரட்டை சிலம்பம் சுற்றி நோபல் வேல்டு ரெக்கார்டு செய்துள்ளார் ரோகன்குமார். அதோடு சிலம்பம் சுற்றியவாறு உடல் உறுப்புகள் மற்றும் விழிப்புணர்வு படங்களை வரைந்தும் சாதனை படைத்து உள்ளார்.