நன்னடத்தை உறுதியை மீறும் குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்க காவல்துறை துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கியது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோரை சிறையில் அடைக்க AC-களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், குற்றவியல் நீதிமன்ற நடுவர் மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.