கரூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் பாளையத்தில் நவநீதகிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. நேற்று இந்த கோவில் கோசாலையில் இருக்கும் சினை பசுவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பசுவிற்கு கண்ணாடி வளையல்கள் அணிவித்து, பட்டு சேலை கட்டி விட்டனர்.

இதனையடுத்து பசுவின் வாலில் பூக்களால் அலங்கரித்து இனிப்பான தின்பண்டங்களை உணவாக வழங்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நவநீத கிருஷ்ணசாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு ஏழு வகையான கலவை சாதங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளது.