கரூர் மாவட்டத்தில் உள்ள தோட்டக்குறிச்சி பகுதியில் ஜெயமுருகன் என்பவர் வசித்து வருகிறார் நேற்று மதியம் இவரது ஓட்டு வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர் ஆனாலும் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1/2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும் வீட்டில் இருந்த உணவுப் பொருட்கள், துணிமணிகள், ஆவணங்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.