கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.