நாடாளுமன்ற தேர்தலில் உங்களுடைய யுக்தி என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த வி.கே.சசிகலா, அதை நான் இப்ப போய் உங்ககிட்ட டிவில சொல்ல முடியுமா ? நீங்க என்னுடைய அனுபவத்தை நீங்க போக போக தானா தெரிஞ்சிப்பீங்க,  அவ்வளவுதான் நான் சொல்ல முடியும். நிச்சயமா அனைவரும் ஒன்றினைவார்கள். என்னை  பொருத்தவரைக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ளவ அத்தனை பேரும்….  அத்தனை தொண்டர்களும்….  எல்லாருக்கும் முகவரி கொடுத்தது இந்த இயக்கம்.

அதனால இந்த இயக்கத்தில் இருக்கிறதா தான் நான் எல்லாரையும் நினைத்துக்கொள்கிறேன். எனக்கு பயமே கிடையாது. சுத்தமா பயம் கிடையாது. இன்னொன்னு சொல்றேன்….  மக்கள பத்தி மட்டும் தான் நான் பார்ப்பேன். எங்க பார்ட்டிகாரங்களாக இருந்தாலும் சரி,  தப்புன்னா தப்புதான்.  திமுக மாதிரி கிடையாது நாங்க…  நீங்க அம்மா காலத்திலே  பார்த்து இருப்பீங்க.

அதனால எங்களுக்குன்னு ஒரு வழி இருக்கு. எங்க ரெண்டு தலைவர் சொல்லிக் கொடுத்த வழி. நிச்சயம் இந்த இயக்கம் நல்லா வரும். எப்போதுமே இந்த இயக்கத்தில் சின்ன பிரச்சனை இருக்கும். ஒரு தலைவர் மறைந்த உடனே ஒரு பிரச்சனை வரும். அந்த பிரச்சனை அப்படியே இருந்தது இல்லை.  திருப்பி சேந்துரும்…   அதனால இது இரண்டாவது நடந்திருக்கு. முதல் முறை சரி பண்ணது நான் தான். முதல் முறை சரி பண்ணும்போது எனக்கு வயசு என்ன இருக்குன்னு பார்த்துக்கிடுங்க ? இப்போ எனக்கு உள்ள அனுபவத்தையும் சேர்த்து என்னால பண்ண முடியும்னு நான் நினைக்கிறேன், நம்புறேன் என தெரிவித்தார்.