இந்தியாவில், குறிப்பாக இன்றைய UPI தலைமுறையினர் அதிகமாகப் பார்த்திராத ஒரு விஷயம் என்றால், அது பழைய ரூபாய் நோட்டுகளின் புழக்கம் தான். கையில் காசைக் கூட அதிகம் பார்க்காதவர்களுக்கு இந்தச் செய்தி ஆச்சரியத்தை அளிக்கும். அது மட்டுமல்ல, அதிகம் பயன்படுத்தப்பட்ட அணா மற்றும் பைசா போன்றவற்றை வைத்திருந்தவர்களும் இதைக் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை.
அப்படியான ஒரு நோட்டு தான் இரண்டரை ரூபாய் நோட்டு (2 ரூபாய் 8 அணா). ஆம், 1918 ஆம் ஆண்டில் இந்த இரண்டரை ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்தது. எனினும், அடுத்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நோட்டு புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டது.
